Published : 01 Aug 2020 12:28 PM
Last Updated : 01 Aug 2020 12:28 PM

பாவங்களைப் போக்கும் சனிப் பிரதோஷம்; நமசிவாயம் சொல்லுங்கள்! 

இன்று சனிக்கிழமை (1.8.2020). சனிப்பிரதோஷம். கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் சனிப்பிரதோஷமாக அமைந்துள்ளது. அற்புதமான இந்தநாளில், மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்யுங்கள். நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள்.

ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன்கள் இருக்கின்றன. திங்கட்கிழமை வருகிற பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் ஈசனை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், மோட்ச கதி அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.
எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மூன்றாவதாக, அதேசமயம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுவது சனிப் பிரதோஷம். சனி பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்பார்கள். சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது அனைத்துப் பாவங்களையும் போக்கக்கூடியது.

இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று சனிக்கிழமை (1.8.2020). சனிப்பிரதோஷம். கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் சனிப்பிரதோஷமாக அமைந்துள்ளது. அற்புதமான இந்தநாளில், மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்யுங்கள். நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள்.

தென்னாடுடைய சிவனார், நம் எல்லா சிக்கல்களையும் கவலைகளையும் களைந்தருள்வார். வாழ்வை வளமாக்கித் தருவார். உரமாக்கித் தருவார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x