Published : 17 Jan 2020 10:23 AM
Last Updated : 17 Jan 2020 10:23 AM

துக்கமும் கஷ்டமும் தீரும்; கடனையெல்லாம் அடைப்பீர்கள்! - தேய்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம்

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை தரிசித்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்களை கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுத்து அருள்வார் பைரவர். எதிரிகள் தொல்லை என்பதே உங்களுக்கு இல்லாமல் செய்து துணை நிற்பார். இன்று தேய்பிறை அஷ்டமி (17.1.2020 வெள்ளிக்கிழமை).


இந்த நாளில் பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள்.


17.1.2020 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி. அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள்.

வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பு. முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் பலமிழப்பார்கள்.


காலபைரவரை வணங்குங்கள். கஷ்டமெல்லாம் தீரும்; துக்கமெல்லாம் மறையும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x