Published : 11 Oct 2019 09:16 AM
Last Updated : 11 Oct 2019 09:16 AM

புரட்டாசியின் சுக்கிர வார பிரதோஷம் இன்று!

வி.ராம்ஜி


சிவனாருக்கு உகந்த பூஜைகளில், பிரதோஷ பூஜை மிக மிக முக்கியமானது. முதன்மையானது. இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும். இன்று 11.10.19 வெள்ளிக்கிழமை. குரு வார பிரதோஷம் போல சுக்கிர வார பிரதோஷம் சிறப்பு வாய்ந்த்து. மறக்காமல், சிவ தரிசனம் செய்யுங்கள்.


சிவபெருமானுக்கு பிரதோஷ நாளில் பூஜை என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகத்துவம் கொண்டது. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இந்தநாளில், பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவனாரை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், இறையருளும் குருவருளும் கிடைப்பது உறுதி. இதேபோல், சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், பிரதோஷம் வருவதும் சுபிட்சம் தருவது. ஐஸ்வர்யம் பெருகும் என்பது உறுதி.


பிரதோஷ நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே மாலையில், பிரதோஷ நேரத்தில், சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

அப்போது, அபிஷேகத்தைத் தரிசிப்பதே புண்ணியம். அபிஷேகத்துக்கானப் பொருட்களை வழங்குவது இன்னும் புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.. எனவே பிரதோஷ நாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

அதுமட்டுமா? சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் சார்த்துங்கள். பிரதோஷ பூஜையைக் கண்ணார தரிசித்தால்,

நம் பாவங்கள் அனைத்தும் தொலையும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

இன்று வெள்ளிக்கிழமை. புரட்டாசி வெள்ளி. புண்ணியம் நிறைந்த புரட்டாசியில், சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், பிரதோஷத்தன்று தரிசியுங்கள். சிவாலயம் செல்லுங்கள். சிவாலயம் சென்று பிரதோஷ பூஜைகளையும் வழிபாடுகளையும், அபிஷேக ஆராதனைகளையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.


இறையருளையும் குருவருளையும் பெற்று இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெறுவது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x