Published : 16 Jul 2019 11:07 AM
Last Updated : 16 Jul 2019 11:07 AM

கிரகண தர்ப்பணம்; ஆடி மாத தர்ப்பணம் மறக்காதீங்க!   - நாலுபேருக்கு உணவுப்பொட்டலம் கொடுங்க! 

வி.ராம்ஜி
நாளைய தினம் 17.7.19 புதன்கிழமை அதிகாலை கிரகண தர்ப்பணம் செய்யவேண்டும். அதன் பிறகு கிரகணம் முடிந்ததும் ஆடி மாதம் பிறப்பதையொட்டி, மாதப் பிறப்பு தர்ப்பணம் செய்யவேண்டும்.
இன்று நள்ளிரவு அதாவது 17ம் தேதி புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. மத்திய நேரமான 3.30 மணிக்கு குளித்துவிட்டு, கிரகண தர்ப்பணம் செய்யவேண்டும். பிறகு கிரகணம் முடியும் போது அதாவது 4.30 மணிக்கு கிரகணத் தீட்டு கழிவதற்காக, நீராடவேண்டும். 


இதன் பிறகு, ஆடி மாதம் பிறக்கிறது. வழக்கம் போல மாதத் தர்ப்பணம் செய்யவேண்டும். ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வலியுறுத்துகிறது சாஸ்திரம். மாத தர்ப்பணம், மாதந்தோறும் அமாவாசை, கிரகண கால தர்ப்பணம், புரட்டாசி மகாளய பட்ச கால தர்ப்பணங்கள் என்றெல்லாம் உள்ளன. 


எனவே அதிகாலையில் கிரகண தர்ப்பணம் செய்யவேண்டும். அதேபோல், விடிந்ததும் வழக்கம் போல ஆடி மாத தர்ப்பணம் செய்யவேண்டும். ஆடி மாதம் என்பது தட்சிணாயன புண்ய காலத் தொடக்கம். எனவே இந்தத் தர்ப்பணம் மகத்துவம் வாய்ந்தது. இந்தத் தர்ப்பணத்தைச் செய்வதாலும் முன்னோரை நினைத்து, தானங்கள், உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாலும் அதில் பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள்; நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 


தட்சிணாயன புண்ய காலத் தொடக்கமான ஆடி மாதப் பிறப்பில், மறக்காமல் தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோரை நினைத்து, ஐந்து பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். கிரகணம் மற்றும் மாத தர்ப்பணம் ஆகியவற்றால் பன்மடங்குப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முடிந்தால், ஆலயம் சென்று இறைவனை வணங்கி வழிபடுவது கூடுதல் பலன்களையும் பலத்தையும் தந்தருளும் என்பது உறுதி! 


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x