Published : 13 Dec 2014 02:46 PM
Last Updated : 13 Dec 2014 02:46 PM
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நாளை (14-ம் தேதி) தொடங்குகிறது.
நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் முதன்மைத் தேர்வு நடைபெறுகிறது.
ஒரே மையமான காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் 900 பேர் எழுதுகின்றனர். முதல் நாள் காலை கட்டுரைத் தாள் தேர்வு, பிற்பகல் ஆங்கிலத் தேர்வு நடைபெறும்.
முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 20-ம் தேதி வரை தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT