Published : 26 Aug 2017 12:50 PM
Last Updated : 26 Aug 2017 12:50 PM

வார ராசிபலன் - 24-08-2017 முதல் 30-08-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். பெண்களுக்குக் காரியத்தடை நீங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடமிருந்து வேண்டிய ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்குப் பணவரத்து கூடும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். ஆசிரியர்கள் வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க மனதில் நிம்மதி பிறக்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி புதனின் மூலம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். அரசுப் பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபார விரிவாக்கம் பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணிச்சுமை குறையும். உயர்நிலை உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊழியர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். ஆடைகள், அணிகலன்கள் சேரும். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.   அரசியல்வாதிகளின் செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் மஞ்சள் எண்கள்: 3, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வலம் வரப் பொருளாதார நிலை ஓங்கும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்றுத் தாமதமாகலாம். வெளியூர் பயணத்தால் அலைச்சல் உண்டாகலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். எதிர்கால சேமிப்பு குறித்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்குப் பண உதவி சற்றுத் தாமதமாக கிடைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். தலைமையுடன் ஆச்சரியச் சந்திப்பு நிகழலாம். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு எண்கள்: 1, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளை வணங்குவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பித்ருக்களை வணங்கிவிட்டு எந்தக் காரியத்தையும் தொடங்கவும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு எதையும் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் இழுபறிக்குப் பின்னர் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறத் திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பெற்றோரின் சொல்லை மீற வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் எண்கள்: 2, 3

பரிகாரம்: திங்களன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் வரும். மனோதிடம் உண்டாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியனின் ஆட்சி சஞ்சாரத்தால் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். மனம் சஞ்சலமற்று அமைதியாகக் காணப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தலைக்கு மேல் நெருக்கடிகள் வந்தாலும் பதற்றம் வேண்டாம். காத்திருந்தால் பலன் உண்டு.  உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். பெண்கள் தைரியமாக எதையும் செய்வார்கள். கலைத்துறையினர் நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு விபரீதமான எண்ணம் தோன்றலாம். எச்சரிக்கை தேவை.  மாணவர்களுக்குப் பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும்.  உற்சாகமாகப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 1, 3

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவரை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் தங்கள் செயல்திட்டங்களைப் பற்றிக் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களின் பேச்சாற்றலால் லாபம் கூடும். போட்டிகளைத் தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் அடையலாம். நிதானமாக இருங்கள். தெளிவு உண்டு.

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். பெண்கள் எந்தவொரு காரியத்தை செய்யும் முன்பும் அதுதொடர்பாக தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், பெரியோரின் ஆசிர்வாதத்தைப் பெறவும். கலைத்துறையினர் நிதானமாக எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் எதிர்காலக் கல்வி பற்றி முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். கல்விக்கடன் குறித்த நல்ல தகவல் வந்துசேரும்.   

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, நீலம் எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும். பித்ரு வழிபாடு சிறப்பு தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x