Published : 13 Mar 2014 12:10 PM
Last Updated : 13 Mar 2014 12:10 PM

நிகழ்வு: காரைக்கால் அம்மையார் குரு பூஜை

‘குரு பூஜை' , வரும் மார்ச் 20, வியாழன் அன்று கி.பி. 400 க்கு முன், ஓர் பங்குனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் காரைக்கால் தலத்தில் பிறந்த "காரைக்கால் அம்மையாரின்" 'குரு பூஜை' , வரும் மார்ச் 20, வியாழன் அன்று நிகழ்கிறது.

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாகவொரு சமய நம்பிக்கை இருப்பதாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். இவருடைய பதிக முறைகளைப். காரைக்கால் சிவன் கோவிலில் இவருக்கெனத் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று அழைக்கப்பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x