Published : 07 Mar 2014 08:49 PM
Last Updated : 07 Mar 2014 08:49 PM

வார ராசி பலன் | 06-03-14 முதல் 12-03-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

உங்கள் ராசிக்கு 3ஆமிடத்தில் குரு வக்கிரமாக இருப்பதாலும், 10இல் புதனும், 11இல் சூரியனும் உலவுவ தாலும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஆன்மிகப்பணி களில் ஈடுபாடு கூடும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது தொடர்பு பயன்படும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

உடன்பிறந்தவர்கள் மூலம் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். கடல் வாணிபம் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், அரசுப்பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 10ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவதால் எதிர்ப்புக்கள் விலகும். கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும். 12-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 8, 11, 12

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 1, 5

பரிகாரம்: கணபதியை வழிபடவும். துர்கைக்கு நெய்தீபம் ஏற்றவும். ஏழைப்பெண்களுக்கு உதவி செய்யவும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2இல் குருவும், 6இல் சனி, ராகு ஆகியோரும், 9இல் சுக்கிரனும் 10இல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். வார நடுப்பகுதியில் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாரப் பின்பகுதியில் பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம்.

குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். 10ஆம் தேதி முதல் புதன் 10ஆமிடம் மாறுவதால் சொந்தத் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். மக்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். புதிய சொத்துக்கள் சேரும். 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, நேர்கதியில் 2ஆமிடத்தில் உலவும் நிலை அமைவதால் செல்வவளம் பெருகும். குடும்ப நலம் சிறக்கும். பேச்சாற்றல் கூடும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 11, 12

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு

நிறங்கள்: பொன் நிறம், நீலம், வெண்மை

எண்கள்: 1, 3, 4, 5, 6, 8

பரிகாரம்: கணபதி ஜபம், ஹோமம் செய்வது நல்லது.

மிதுனம்

புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள், ஜோதிடர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும்.

வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று கூடும். நற்காரியங்களில் கலந்து கொள்வீர்கள். 10ஆம் தேதிமுதல் புதன் 9-ஆமிடம் மாறுவதால் புனிதப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 11, 12

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, இளநீலம், வெண்மை, மெரூன்

எண்கள்: 5, 6, 7

பரிகாரம்: தன்வந்திரி பகவானை வழிபடவும். துர்க்கைக்கும் முருகனுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.

கடகம்

3 இல் வக்கிர செவ்வாயும், 4 இல் வக்கிரச் சனியும், 10 இல் கேதுவும் 12 இல் வக்கிர குருவும் உலவுவதால் தொழிலில் ஓரளவு வளர்ச்சி காணலாம். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். பண வரவு சற்று அதிகரிக்கும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பழகவும். 10ஆம் தேதி முதல் புதன் 8ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்தநிலை விலகும். 12-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் பொருளாதாரம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் அதிகமாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்ய வேண்டிவரும். தான, தர்ம, தெய்வப்பணிகளுக்காகவும் செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 8, 11, 12

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 7, 9

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். துர்க்கைக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லவும்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 3 இல் ராகுவும், 6 இல் புதனும், 11 இல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பால் நலம் உண் டாகும். ஏற்றுமதி,இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். பணநடமாட்டம் அதிகரிக்கும். பெரியவர்களது ஆசிகள் கிடைக்கும்.

2 இல் செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம் தேவை. சனி 3 இல் வக்கிரமாக இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. உடன்பிறந்தவர்களது நலம் பாதிக்கும். கூட்டாளிகளை நம்பி ஏமாற வேண்டாம். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் ஆதாயம் கூடும். மன உற்சாகம் பெருகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 11

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பொன் நிறம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 3, 4, 5

பரிகாரம்: லட்சுமி பூஜை செய்யவும். ஏழை மற்றும் அனாதைப் பெண்களுக்கு உதவவும். சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாகத் தருவது நல்லது.

கன்னி

5இல் சுக்கிரனும் 6இல் சூரியனும் 10இல் வக்கிர குருவும் உலவுவ தால் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். தந்தையால் நலம் ஏற்படும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். ஜன்ம ராசியில் வக்கிர செவ்வாயும், 2இல் வக்கிர சனியும் ராகுவும் உலவுவதால் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். 10ஆம் தேதி முதல் புதன் 6ஆமிடம் மாறுவதால் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலம். 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, நேர்கதியில் 10ஆமிடத்தில் உலவத் தொடங்குவதால் தொழிலில் முழுக்கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் மன வருத்தம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 11, 12

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வட கிழக்கு

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், பச்சை

எண்கள்: 1, 3, 5, 6

பரிகாரம்: செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடவும். குடும்பத்தாரிடம் அன்புடன் பேசிப் பழகவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x