Published : 23 Apr 2015 04:07 PM
Last Updated : 23 Apr 2015 04:07 PM

வார ராசி பலன்23-4-2015 முதல் 29-4-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். கலைத்துறை ஊக்கம்தரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு கொண்டு விலகி இருப்பது நல்லது. வெண்மை நிறப்பொருட்கள், கடலிலிருந்து வெளிப்படும் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கோபப்படாமல் அன்புடன் பழகுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. 26-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரம், கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலம். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். பணநடமாட்டம் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 28, 29.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.



விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும், 9-ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது விசேஷமாகும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். எரிபொருட்கள், மின்சாரம், ஆயுதங்கள், நிலபுலங்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். உற்சாகம் கூடும்.

தொலைதூரப் பயணம் பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தொழில் வளர்ச்சி பெறும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வுக்கு வாரப் பின்பகுதியில் சந்தர்ப்பம் உருவாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களாலும் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 25 (பிற்பகல்), 28, 29.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு,வடக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 3, 4, 5, 9.

பரிகாரம்: ஜன்மச் சனிக்கும் 5-ல் உள்ள கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது அவசியம். ஆஞ்சநேயரையும் பிள்ளையாரையும் வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சூரியனும் செவ்வாயும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். மக்களால் அனுகூலம் உண்டாகும். திடீர்ப் பொருள் வரவுக்கு இடமுண்டு. ஊக வணிகம் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு பயன்படும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். 4-ல் கேதுவும், 6-ல் சுக்கிரனும் 12-ல் சனியும் உலவுவதால் தாய் நலனில் அக்கறை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்.

கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவரின் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். கூட்டுத்தொழிலில் வளர்ச்சி காண்பது கடினம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றத்துக்குக் குறுக்கீடுகள் முளைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வாரக் கடைசியில் தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 28, 29.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு.. .

நிறங்கள்: சிவப்பு, புகை நிரம். ஆரஞ்சு. .

எண்கள்: 1, 4, 9. .

பரிகாரம்: அந்தணர்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் உதவுவது நல்லது. நவக்கிரகங்களில் குருவுக்கு முல்லை மலர் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.



மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 7-ல் குருவும், 11-ல் சனியும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். மகிழ்ச்சி பெருகும். பொருளாதார நிலை உயரும். நல்லவர்கள் உதவுவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம் பெருகும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். 26-ம் தேதி முதல் புதன் 5- ம் இடம் மாறி, சுக்கிரனுடன் கூடுவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வாரப் பின்பகுதியில் சந்திராஷ்டமம் என்பதால் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கும். மனதில் சலனம் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதி:,ஏப். 25.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7, 8..

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம். தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவி செய்யவும்.



கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும், 4-ல் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். மனஉறுதி கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் நிர்வாகத் துறையினருக்கும் விசேஷமான நன்மைகள். உயர் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். எரிபொருள், மின்சாரம், ஆயுதம் போன்ற இனங்கள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும்.

6-ல் குரு இருப்பதால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. மக்கள் நலனின் கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். 26-ம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு அனுகூலம். மாணவர்கள் நிலையில் வளர்ச்சி காணலாம். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். புதிய பதவிகள் தேடி வரும். வாழ்க்கைத் துணை நலம் சிறக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 28, 29.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 8, 9 .

பரிகாரம்: பிள்ளையாரையும், துர்க்கை அம்மனையும் தொடர்ந்து வழிபடுவது நல்லது. குருவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும். வேதவிற்பன்னர்களுக்கு உதவுவது நல்லது.



மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாயும் புதனும் 3-ல் சுக்கிரனும், 5-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் நலம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் இருக்கும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் வரவேற்பு கூடும்.

திருப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மருத்துவர்களது நிலை உயரும். கடல் வாணிபம் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பூர்விகத் தொழில் வளர்ச்சி பெறும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். 26-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 28, 29.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: சூரியன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. நாக வழிபாடு செய்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x