Published : 27 Sep 2018 11:33 AM
Last Updated : 27 Sep 2018 11:33 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - துலாம், விருச்சிகம், தனுசு

துலாம்

5jpg 

வெகுளித்தனமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள்! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் உட்கார்ந்துகொண்டு எப்போதும் மருந்து, மாத்திரையுமாக உங்களை குருபகவான் பாடாய்ப்படுத்தினாரே!

குடும்பத்தில் சாதாரணமாகப் பேசினாலும் சண்டையில் முடிந்ததே! அவமானங்களாலும் பணப்பற்றாக்குறையாலும் ஓடி, ஒதுங்கினீர்களே! இப்படி உங்களைச் சிக்கவைத்து வேடிக்கை பார்த்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி, தனவீடான 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.

thulaamjpgright

எதிர்பார்த்த வகையில் பணம் வந்து அனைத்தையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் புயல் வீசிய வீட்டில் அமைதி திரும்பும். நிலுவைப் பணம் கைக்கு வரும். பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பொதுக் காரியங்களில் ஈடுபட்டுப் புகழடைவீர்கள். புது வேலை கிடைக்கும். சங்கம், அறக்கட்டளைப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் உங்களைப் பற்றிய வதந்திகளைச் சிலர் பரப்புவார்கள். கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமென்று வருந்துவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்தபந்தங் கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரமாகிச் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்து செல்லும்.  10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அந்தரங்க விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம்.

புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கிவிட்டுத் தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகளால் உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும்.

இந்த குரு மாற்றம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். மொச்சைப் பயிறைத் தானமாகக் கொடுங்கள்.

 

விருச்சிகம்

3jpg 

பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக் காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறமாட்டீர்கள்! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைக்கழிப்பையும் செலவுகளையும் தூக்கமின்மையையும் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாகத் தொடர இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

தலைச் சுற்றல், காய்ச்சல், சிறுநீரகத் தொற்று, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் புத்திர பாக்கியம் உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக அமையும். மகள் உங்களைப் புரிந்துகொள்வாள்.

viruchigamjpg

மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு பகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பு குறையாது. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்ப தால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். 04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வேலைக்கு விண்ணப் பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை யால் பதற்றப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடியாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும்.

20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்துக்குச் செல்வதால் மற்றவர்களுக்காக உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத்தொல்லை கள் அதிகரிக்கும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் இளையவர்களால் ஆதாயமடை வீர்கள்.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி. ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.

விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும் கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மன் கோயிலுக்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையன்று சென்று வணங்குங்கள். கொண்டைக்கடலையைத் தானமாகக் கொடுங்கள்.

 

தனுசு

4jpg 

சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ளவர் நீங்கள். அடித்தட்டு மக்களின் நலனுக்காக அயராது போராடுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளைத் தந்த குருபகவான் இப்போது 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் நுழைகிறார்.

உங்களுக்கு பணவரவு குறையாது. ஷேர் மூலமாகப் பணம் வரும். ஆனால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச்செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

dhanusujpgright

கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய நண்பர்களால் உதவியுண்டு. இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதைத் தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்ல வேண்டும்.   குரு பகவான் உங்களது சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும்.

வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள். சிலர் புதுசு வாங்குவீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண, விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். தாயார், தாய்மாமன், அத்தை வழியில் ஆதரவுப் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திரும்பக் கொடுப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவீர்கள். தைரியம் கூடும். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் சேர்ந்து புது வியாபாரம் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 கேட்டை நட்சத்திரத்துக்குச் செல்வதால் வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், தாழ்வுமனப்பான்மை, நாட்டமின்மை, பிறர் மீது நம்பிக்கையின்மை, காய்ச்சல், நரம்புச் சுளுக்கு, கை, கால் மரத்துப் போவதெல்லாம் ஏற்படும். புதிதாக அறிமுகமாகுபவரை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே  மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்ற குழப்பம் வந்து நீங்கும். இக்காலகட்டத்தில் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூல நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் அலைச்சலும் ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வார்கள். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வீடு கட்டுவீர்கள். உடல்பருமனைக் குறைப்பீர்கள். யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். துணி, மின்னணு, மின்சார சாதனங்கள், தரகு, துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

இந்த குரு மாற்றம் புதிய திட்டங்களை நிறைவேற்ற உதவுவதுடன் ஓரளவு வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சித்தர் பீடம் சென்று வணங்குங்கள். வேர்க்கடலையைத் தானமாகக் கொடுங்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x