Last Updated : 06 Jun, 2019 03:02 PM

 

Published : 06 Jun 2019 03:02 PM
Last Updated : 06 Jun 2019 03:02 PM

மகாலக்ஷ்மி அருள் தரும் வெள்ளி விளக்கு!

ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு தெய்வங்கள் குடியிருப்பதாக ஐதீகம். அதேபோல், ஒவ்வொருவிதமான விளக்குகளை ஏற்றி வைத்து வணங்குவதால், அந்தந்த விளக்குகள், உரிய பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பொதுவாகவே, விளக்கேற்றினாலே புண்ணியம். விளக்கேற்றி வழிபட்டாலே, பல நன்மைகள் தேடி வரும். அப்படியிருக்க, உரிய வகை விளக்குகளைக் கொண்டு விளக்கேற்றினால், இன்னும் ஏராளாமான பலன்களையும் செளபாக்கியங்களையும் பெறலாம் என்பது உறுதி.

தினமும் காலையும் மாலையும் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு, குளித்து, பூஜையறையில் மண்ணால் செய்யப்பட்ட விளக்கைக் கொண்டு ஏற்றி, இறைவனை வழிபட்டால், வீட்டில் உள்ள பீடைகள், தரித்திரங்கள் விலகும். வீட்டில் தெய்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும்.

வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கு என்பது ரொம்பவே விசேஷம். இதைக் கொண்டு விளக்கேற்றினால், மகாலக்ஷ்மியின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.

பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்கைக் கொண்டு தீபமேற்றி வழிபட்டால், சத்தேவதைகள் நம்மை நெருங்குவார்கள். வீட்டில் தடைப்பட்ட காரியங்களெல்லாம் நடந்தேறும். புத்தியில் தெளிவும் காரியத்தில் மேன்மையும் உண்டாகும்.

வெண்கல விளக்கில் தீபமேற்றி பிரார்த்தனை செய்தால், தேக ஆரோக்கியம் கூடும். தீராத வியாதியும் தீரும். மருத்துவச்செலவுகள் குறையும்.

இரும்பால் செய்யப்பட்ட விளக்கைக் கொண்டு தீபமேற்றி பிரார்த்தனை செய்தால், சனி கிரகத்தால் நேரும் இடைஞ்சல்களும் இன்னல்களும் கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும். சனி பகவான், நீதிபதியாக இருந்து நம்முடைய நல்லனவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நாம் நினைத்ததையெல்லாம் தந்தருள்வார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

காமாக்ஷி விளக்கு கொண்டு ஏற்றும் நடைமுறை குடும்பத்தில் இருந்தால், தாராளமாக ஏற்றி வணங்கலாம். அதேபோல் ஐந்து முகம், அல்லது இரண்டு முகம் கொண்ட விளக்குகளை நம் செளகரியத்துக்கு தகுந்தது போல் ஏற்றி வழிபடலாம்.

காமாக்ஷி விளக்கில் தீபமேற்றி பிரார்த்தனை செய்தால், சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x