Last Updated : 05 Jun, 2019 03:46 PM

 

Published : 05 Jun 2019 03:46 PM
Last Updated : 05 Jun 2019 03:46 PM

தினமும் தீபமேற்றும் நேரம்

வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது என்பது எல்லா வீடுகளிலும் நடைபெறும் வழக்கம்தான். ஆனால், எப்போது விளக்கு ஏற்றவேண்டும், எப்படி விளக்கேற்ற வேண்டும் என்பது குறித்துதான் இங்கே பலருக்கும் குழப்பம்; பல கேள்விகள்.

தினமும் காலையில் 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அதாவது சூரிய உதயத்துக்கு முன்பாகவே விளக்கேற்றிவிட வேண்டும். அதேபோல், மாலையில், சூரிய அஸ்தமனத்தின் போது, மாலை 6 மணிக்கு விளக்கேற்ற வேண்டும்.

அதாவது, சூரிய உதயமாவதற்கு முன்பாகவும் சூரிய அஸ்தமனமான பிறகும் விளக்கேற்றவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எல்லா நாளும் இப்படி, அதிகாலையில் 4.30 முதல் 6 மணிக்கும் மாலையில் 6 மணிக்கும் விளக்கேற்றுவது குடும்பத்தில் ஒற்றுமையையும் நிம்மதியையும் ஏற்படுத்தும்.

அதேபோல், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றுவதற்கு முன்பாக, அதாவது முதல் நாளில் விளக்குகளை நன்றாகத் துலக்கி வைத்து, விளக்கேற்றும் பூஜை மேடையை நன்றாகச் சுத்தம் செய்து, மறுநாளான செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றினால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திரங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

இதேபோல், தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமைகள் இதேபோல், அதிகாலையில் 4.30 முதல் 6 மணிக்கும், மாலையில் 6 மணிக்கும் விளக்கேற்றி வந்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும். மகாலக்ஷ்மியின் பேரருள் வீட்டில் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x