கஷ்டமெல்லாம் தீர... சஷ்டியில் கந்த தரிசனம்!

கஷ்டமெல்லாம் தீர... சஷ்டியில் கந்த தரிசனம்!
Updated on
1 min read

நம் கஷ்டமெல்லாம் தீர, கவலைகளெல்லாம் பறந்தோட... இந்த சஷ்டியில் கந்தகுமரனை வணங்குவோம். இன்று 23ம் தேதி சஷ்டி.

கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை வணங்குவது விசேஷம். அதேபோல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது, மிகுந்த பலனைத் தரும் என்பார்கள்.

முக்கியமாக, மாதந்தோறும் வரும் சஷ்டி திதியில், முருக வழிபாடு, வாழ்வில் வளங்களையும் நலங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்.

பெரும்பாலான முருக பக்தர்கள், இந்த சஷ்டி திதியில், விரதம் மேற்கொள்வார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வணங்கி மகிழ்வார்கள்.

இன்று 23.6.19 ஞாயிற்றுக்கிழமை சஷ்டி. முருகனுக்கு உரிய அற்புதமான நாள். இந்த நாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். கந்தனுக்கு உகந்த செவ்வரளி மாலையை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். மேலும் நான்குபேருக்கேனும் அன்னதானம், உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

சஷ்டியில் முருகப் பெருமானைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்து, தான தருமங்கள் செய்தால், நம் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். கஷ்டங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in