Published : 21 Mar 2018 05:29 PM
Last Updated : 21 Mar 2018 05:29 PM

வார ராசிபலன் 22.03.2018 முதல் 28.03.2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். சின்ன விஷயங்களுக்குக் கூட உங்களுக்கு கோபம் வரலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். பணத்தேவை உண்டாகும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் பார்க்கிறார். வேலையில் பதற்றமும் வீண் அலைச்சலும் இருக்கும். தொழில், வியாபாரத்தில் காரிய தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விடக் குறையக் கூடும்.

புதிய நபர்களுக்கு பொருட்களைக் கொடுக்கும்போது கவனம் தேவை. எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் பதற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு, எதிர்பார்க்கும் தகவல் தாமதப்படலாம். கலைத் துறையினருக்கு சொத்துக்கள் தொடர்பான தடைகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு, சிக்கல்கள் தீரும். மாணவர்களுக்கு, பாடங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமையன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்குஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் அமைந்திருப்பதால் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதைக் குறைப்பது நல்லது. எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில்  போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியிடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பெண்கள், பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காணலாம். கலைத் துறையினருக்கு, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் | எண்கள்: 2, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமை நவக்கிரகங்களில் செவ்வாய்க்குத் தீபம் ஏற்றி வணங்க எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பரிவர்த்தனை யோகத்தைப் பெறுகிறீர்கள். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாள் பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஊழியர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகளை மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் இறுக்க நிலை மாறும். பெண்கள், காரியங்களைத் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறத் துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மனவருத்தம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். பணவரவு இருக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றலாம். பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுடன் கருத்து வேற்றுமைகள் நீங்கும். பெண்களுக்கு, கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத் துறையினருக்குப் பாராட்டுகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். அரசியல்வாதிகளுக்கு, பிரச்சினைகள் விலகும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு, திட்டமிட்டுப் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சனிக்கிழமையன்று சனீஸ்வர பகவானை நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் அறிவுத் திறமை வெளிப்படும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் இனிமையான பேச்சினால் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு, மனை வாங்குவதில் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு ஏற்றம் இல்லாவிட்டாலும் வருமானத்துக்குக் குறைவிருக்காது. தொழில் விரிவாக்கத் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது.

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகக் கோபத்தை குறைப்பது நல்லது. பெண்களுக்கு, அறிவுபூர்வமாகச் செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம் இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். கலைத் துறையினருக்கு, பாதுகாப்பு அவசியம். அரசியல்வாதிகளுக்கு, உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய எண்ணம் உண்டாகும். மேற்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்து கிரகங்களின் சஞ்சாரமும் சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். காரிய தாமதம் குறித்த கவலை நீங்கும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விடக் குறைவான லாபம் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பரபரப்பாகக் காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்திலிருப்பவர்கள், கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் மன வருத்தம் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு, பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையைச் செய்து முடிக்க கால தாமதமாகலாம். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்தால் நன்மைகள் அதிகமாகக் கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். உழைப்பு வீண் போகாது. மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x