Published : 02 May 2019 11:24 AM
Last Updated : 02 May 2019 11:24 AM

நம்பிக்கை தரும்

ஒரு நகரம் வெகுநாட்களாக மழைக்காகக் காத்திருந்தது. பருவம் கடந்தும் மழைவராத நிலையில் அந்த நகரத்து தேவாலயப் பாதிரியார் மழைப் பிரார்த்தனைக்கு நகர மக்களை ஒரு நாள் காலை அழைத்தார்.

பிரார்த்தனைக்காக அந்தத் தேவாலயத்தில் கூடிய மக்கள் எல்லாரும் ஒரு குழந்தையைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தனர்.

அந்தச் குட்டிச் சிறுமி கையில் ஒரு சிறுகுடையோடு தேவாலயத்துக்கு வந்திருந்தாள்.

“இவள் என்ன முட்டாளா? மழை இல்லாத நேரத்தில் குடையைக் கொண்டுவந்திருக்கிறாள். தொலைத்துவிடப் போகிறாள்” என்றனர்.

“நாமெல்லாம் சேர்ந்து பிரார்த்தித்தால் மழை வரும் என்று நினைத்தேன்” என்று சொன்னாள் அந்தக் குழந்தை.

ஒரேயொரு குழந்தைதான் குடை எடுத்து வந்திருந்தாள். அந்தக் குழந்தை பிரார்த்தித்தால், மழை வருவதற்கு சாத்தியமுண்டுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x