Last Updated : 11 Mar, 2019 10:55 AM

 

Published : 11 Mar 2019 10:55 AM
Last Updated : 11 Mar 2019 10:55 AM

பஞ்சமியில் வாராஹி வழிபாடு - தரித்திரம் விலகும்; சுபிட்சம் பெருகும்!

இன்று பஞ்சமி திதி. இந்தநாளில், வராஹிதேவியை வழிபடுங்கள். நமக்கு வந்திருக்கும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வெற்றியைத் தந்தருள்வாள் தேவி.

சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால், இந்த  ஏழுபேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் மகாசக்தி எனப் பேரெடுத்தவள் வாராஹிதேவிதான்.

பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். எல்லாச் செயல்களிலும் துணையிருந்து காத்தருள்வாள் என்கின்றனர் பக்தர்கள்.

வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து போவாளாம் தேவி!

மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைத்து வாராஹியை வணங்குங்கள். வீட்டின் தரித்திரத்தையே போக்குவாள். சுபிட்சத்தை இல்லத்தில் குடிகொள்ளச் செய்வாள் என்பது ஐதீகம்!

இன்று பஞ்சமி திதி (11.3.19). வாராஹியை மனதார வணங்கி வழிபடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x