Published : 20 Dec 2018 10:23 AM
Last Updated : 20 Dec 2018 10:23 AM

வார ராசிபலன் டிசம்பர் 20 முதல் 26 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை நிலவும். ராசிநாதன் சுக்கிரன் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் இருக்கும். முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்க மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். சுபநிகழ்ச்சிகளுக்குச் செலவு செய்வீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். கலைத் துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வழக்குகளில் இழுவை இருக்கும். மாணவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் நீலம்

எண்கள்: 1, 6

பரிகாரம்: சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத்திறன் அதிகரிக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும்.  சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் ஊழியர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

குடும்ப ஸ்தானத்தில் சூரியன் வீற்றிருக்கிறார். கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனம் தேவை. பெண்களுக்கு, திறமையான பேச்சினால் ஆதாயம் அடைவீர்கள். கலைத் துறையினருக்கு, சொத்துக்களை அடைவதில் தடைகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரங்களில் தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்: பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும்.  மனஸ்தாபங்கள் நீங்கிப் பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரவு அதிகரிக்கும். மனத்தில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நின்றுபோன வேலைகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.

புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு புதிய தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு, பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தைப் போக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்தவொரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. பணவரவு தாமதமாகும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்பத்தில் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தைக் காண்பிக்க வேண்டாம். பெண்களுக்கு எந்தவொரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கலைத் துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். பிறரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், அடர்பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: கிருஷ்ண பகவானை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் வேகமாகச் செய்யும் எண்ணம் தோன்றும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதப்போக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலும், பதற்றமும் ஏற்பட்டு நீங்கும்.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்களுக்கு யாரையும் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், சனி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம்

எண்கள்: 3, 8

பரிகாரம்: சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி  உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவைத் தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு, உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 2, 3

பரிகாரம்: முதியவர்களுக்கு உதவிகள் செய்தால் செல்வச் சேர்க்கை உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x