கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏராளமானோர் நேற்று குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். | படங்கள்: ம.பிரபு |
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏராளமானோர் நேற்று குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். | படங்கள்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

கேரளா​வில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆண்​டு​தோறும் கார்த்​தி​கை, மார்​கழி மாதங்​களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை​யும், அதைத் தொடர்ந்​து, தைமுதல் தேதி மகரஜோதி தரிசன​மும் விமரிசை​யாக நடை​பெறும்.

இந்​நிலை​யில், கார்த்​திகை மாதத்​தின் முதல் நாளான நேற்று மண்டல பூஜை தொடங்​கியது. இதையொட்​டி, சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நேற்று அதி​காலை 3 மணிக்கு நடை திறந்​து, தீபா​ராதனை காட்​டப்​பட்டு சுவாமி தரிசனத்​துக்கு பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

பொது​வாக, மார்​கழி, தை மாதங்​களில் சபரிமலை செல்​லும் பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளில் மாலை அணிவது வழக்​கம். ஒரு மண்டல காலம் (41 நாட்​கள்) விரதம் இருக்​கும் அவர்​கள், பின்​னர் இரு​முடி கட்​டிக்​கொண்​டு, பாத​யாத்​திரை​யாக சென்று ஐயப்​பனை தரிசனம் செய்​வார்​கள். நேற்று கார்த்​திகை முதல் நாள் என்​ப​தால், ஏராள​மான பக்​தர்​கள் மாலை அணிந்​தனர்.

இதனால், சென்னை கோடம்​பாக்​கம் மகாலிங்​கபுரம், கே.கே.நகர், அண்ணா நகர், ராஜா அண்​ணா​மலைபுரம், நங்​கநல்​லூர், மடிப்​பாக்​கம், மாதவரம் பால் பண்ணை உட்பட பல்​வேறு பகு​தி​களில் உள்ள ஐயப்​பன் கோயில்​களி​லும் நேற்று அதி​காலை முதலே பக்​தர்​கள் கூட்​டம் அதி​கரித்​துக் காணப்​பட்​டது.

முதல்​முறை​யாக சபரிமலைக்​குச் செல்​லும் கன்​னி​சாமிகள், சிறு​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை ஏராள​மான பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​தனர். அவர்​களுக்கு குரு​சாமிகள் மாலை அணி​வித்​தனர். ‘சாமியே சரணம் ஐயப்​பா’ என்று கோஷத்​துடன் மாலை அணிந்​து​கொண்ட பக்​தர்​கள்​, ஐயப்​பனை தரிசித்​து, விரதத்​தை தொடங்​கினர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in