திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவை
ஒட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்.
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவை ஒட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்.
Updated on
1 min read

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர்.

அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆவணித் திரு​விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்​து, தின​மும் சுவாமி குமர​விடங்க பெரு​மானும், வள்​ளி​யம்​மனும் தனித்​தனி வாக​னங்​களில் வீதி​யுலா சென்​றனர்.

விழா​வின் 10-ம் நாளான நேற்று தேரோட்​டம் நடந்​தது. இதையொட்​டி, அதி​காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டு, விஸ்​வரூப தீபா​ராதனை, உதய மார்த்​தாண்ட அபிஷேகம் நடை​பெற்​றன. வள்​ளி, தெய்​வானை அம்​மன்​களு​டன் சுவாமி குமர​விடங்க பெரு​மான் தேரில் எழுந்​தருளி​னார்.

காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்​பட்டு நான்கு ரதவீ​தி​களை​யும் சுற்றி வந்​தது. பின்​னர், சுவாமி குமர​விடங்க பெரு​மான், வள்​ளி, தெய்​வானை அம்​மன் எழுந்​தருளிய தேரை பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். இந்த தேர் ரதவீ​தி​கள் சுற்றி வந்த பின்​னர் நிலையை வந்​தடைந்​தது. தொடர்ந்​து, வள்​ளி​யம்​மன் மட்​டும் வீற்​றிருந்த தேர் புறப்​பட்டு ரதவீ​தி​களை வலம் வந்​து, மீண்​டும் நிலைக்கு வந்து சேர்ந்​தது.

தூத்​துக்​குடி மாவட்ட நீதிபதி வஷித்​கு​மார், அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் ஞான​சேகரன், ஓய்​வு​பெற்ற கால்​நடைத் துறை உதவி இயக்​குநர் பாலசுப்​பிரமணிய ஆதித்​தன் மற்​றும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர். திருச்​செந்​தூர் டி.எஸ்​.பி. மகேஷ்கு​மார் தலை​மை​யில் ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் தக்​கார் அருள்​முரு​கன், இணை ஆணை​யர் ஞான​சேகரன் மற்​றும் கோயில் பணி​யாளர்​கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in