பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்.
Updated on
1 min read

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம், திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் அமைந்​துள்ள கற்பக விநாயகர் கோயி​லில் சதுர்த்தி விழா கொடியேற்​றுடன் நேற்று தொடங்​கியது. பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்​கள் விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்​றத்துடன் நேற்று தொடங்​கியது.

இதையொட்​டி, சண்​டிகேசுவரர் சந்​நி​தி​யில் இருந்து கொடி புறப்​பாடாகி, கோயிலை வலம் வந்​தது.தொடர்ந்​து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்​டிகேசுவரர், அங்​குசத்​தேவர் எழுந்​தருளினர். பின்​னர், கொடிமரத்​துக்​கும், மூஞ்​சூறு வாக​னம் வரையப்​பட்ட கொடிப்​படத்​துக்​கும் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

சிவாச்​சா​ரி​யார்​கள் வேத மந்​திரங்​கள் முழங்க கொடியேற்​றம் நடை​பெற்​றது. விழா நாட்​களில் காலையில் வெள்​ளிக் கேடகத்​தி​லும், மாலை​யில் சிம்​மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்​ளிட்ட வாக​னங்​களி​லும் விநாயகர் எழுந்தருளி திரு​வீதி உலா நடை​பெறும்.

ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை சூரனை விநாயகர் வதம் செய்​யும் கஜமுக சூரசம்​ஹாரம், 26-ம் தேதி தேரோட்​டம் நடை​பெறும். அன்​றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் நடை​பெறும் சந்​தனக்​காப்பு அலங்​காரத்​தில் மூல​வர் கற்பக விநாயகர் பக்​தர்​களுக்கு காட்​சி​யளிப்​பார்.

ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்​தி​யன்​று, அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெறும். தொடர்ந்​து, கோயில் திருக்​குளத்​தில் அங்​குசத்​தேவருக்கு தீர்த்​த​வாரி நடை​பெறும். பிற்​பகல் 2 மணிக்கு மூல​வருக்கு முக்​குறுணி மோதகம் படையலிடப்​படும். இரவு பஞ்​சமூர்த்தி சுவாமி புறப்​பாடு நிகழ்ச்​சி​யுடன் விழா நிறைவு பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in