ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். (உள்படம்) சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். (உள்படம்) சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘கோ​விந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூர தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்​தனர்.

ஆண்​டாள் அவதரித்த ஆடிப்​பூர தேரோட்​டத் திரு​விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்​டாள் ரெங்​க மன்​னார் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தனர். விழாவையொட்டி தின​மும் காலை ஆடிப்​பூரக் கொட்​டகை​யில் ஆண்​டாள் ரெங்​கமன்​னாருக்கு சிறப்பு திரு​மஞ்​சன​மும், மாலை சிறப்பு அலங்​காரத்​தில் பல்​வேறு வாக​னங்​களில் வீதி உலா​வும் நடை​பெற்​றது.

ஆடிப்​பூர திரு​விழா​வின் 5-ம் நாள் காலை பெரி​யாழ்​வார் மங்​களா​சாசன​மும், இரவு 5 கருட சேவை​யும், 7-ம் நாள் விழா​வில் சயன சேவை​யும் நடை​பெற்​றன. 8-ம் நாள் விழா​வான நேற்று முன்​தினம் இரவு ரெங்​கமன்​னார் தங்​கக் குதிரை வாக​னத்​தி​லும், ஆண்டாள், பூப்​பல்​லக்​கிலும் எழுந்​தருளி வீதி உலா வந்​தனர்.

கள்ளழகர் சீர்வரிசை: நேற்று காலை ஆண்​டாள், ரெங்​கமன்​னார் ஏகாந்த திரு​மஞ்​சனம் முடிந்​து, சர்வ அலங்​காரத்​தில் ஆடிப்பூரதேரில் எழுந்​தருளினர். ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர், மதுரை அழகர்​கோ​யில் கள்​ளழகர் பெரு​மாள் சீர்​வரிசை​யாக அனுப்பிவைத்தபட்டு வஸ்​திரம் உள்​ளிட்ட மங்கலப் பொருட்​கள் ஆண்​டாள், ரெங்​க மன்​னாருக்கு அணிவிக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

காலை 9.10 மணிக்கு அமைச்​சர்​கள் சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்ரா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்​டத்தை தொடங்கி வைத்​தனர். 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் கலந்​து​கொண்டு 7 வடங்​களைப் பிடித்து ரத வீதி​கள் வழி​யாக தேரை இழுத்​தனர். பிற்​பகல் 1 மணிக்கு தேர் நிலையை அடைந்​தது.

போலீஸ் பாதுகாப்பு: விழா​வில் எம்​.எல்​.ஏக்​கள், தங்​கப்​பாண்​டியன், ஆர்​.ஆர் சீனி​வாசன், சிவ​காசி மேயர் சங்​கீ​தா, கோட்டாட்சியர் பாலாஜி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். அறங்​காவலர் குழுத் தலை​வர் பி.ஆர். வெங்​கட்​ராம ராஜா மற்​றும் உறுப்​பினர்​கள், செயல் அலு​வலர் சர்க்​கரை​யம்​மாள் ஆகியோர் ஏற்​பாடு​களை செய்​திருந்​தனர். விருதுநகர் மாவட்ட எஸ்​.பி. கண்ணன் தலை​மை​யில் 1,200-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in