Published : 10 Jun 2025 06:03 AM
Last Updated : 10 Jun 2025 06:03 AM

வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் ராஜ அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவர். | படம்: ம.பிரபு |

சென்னை / சிறுவாபுரி: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முரு​கன் கோயில்​களில் வைகாசி விசாக திரு​விழா நேற்ற கோலாகல​மாக நடை​பெற்​றது. லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சிறு​வாபுரி முரு​கன் கோயி​லில் ஆளுநர் ஆர்​.என்.ரவி சுவாமி தரிசனம் செய்​தார். முரு​கப்​பெரு​மான் அவதரித்த வைகாசி விசாக நாளை ஒட்டி பெரும்​பாலான முரு​கன் கோயில்​களில் 10 நாள் வைகாசி விசாகத் திரு​விழா நடை​பெறும்.

அந்​த வகை​யில், இந்த ஆண்டு பல்​வேறு கோயில்​களில் ​விழா நேற்று நடை​பெற்​றது. பல்​வேறு பகு​தி​களில் இருந்து லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கோயிலுக்கு வந்​தனர். அதி​காலை​யில் இருந்து பக்​தர்​கள் புனித நீராடி நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

ஏராள​மான பக்​தர்​கள் பாத​யாத்​திரை​யாக​வும், அலகு குத்​தி​யும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்​குடம் எடுத்​தும் வந்து தங்​கள் வேண்​டு​தலை நிறைவேற்​றினர். குன்றத்தூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், குமரன்குன்றம் உள்ளிட்ட கோயில்களில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திருத்​தணி முரு​கன் கோயி​லில் மூல​வருக்கு சிறப்பு அபிஷேகம் செய்​யப்​பட்​டு, தங்க கவசம் அணி​வித்து சிறப்பு பூஜைகள் நடத்​தப்​பட்​டன. முரு​கப்​பெரு​மானை தரிசனம் செய்​வதற்​காக, தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும், அண்டை மாநில​மான ஆந்​தி​ரா​வில் இருந்​தும் பக்​தர்​கள் திரண்டுவந்​தனர். சென்னை வடபழனி முரு​கன் கோயி​லில் காலை முதலே பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

‘அரோகரா அரோகரா’ என பக்தி கோஷமிட்டு பக்​தர்​கள் வழிபட்​டனர். 10 நாட்​கள் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெறுகின்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரி அருகே உள்ள சிறு​வாபுரி பாலசுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் வைகாசி விசாகத்தை முன்​னிட்​டு, தமிழக ஆளுநர் ஆர்​.என்​. ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். அவருக்கு திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் பிர​தாப், இந்து சமய அறநிலை​யத் துறை​யின் திரு​வள்​ளூர் உதவி ஆணை​யர் சிவ​ஞானம், கோயில் செயல் அலு​வலர் மாதவன், அர்ச்​சகர் ஆனந்​தன் குருக்​கள் ஆகியோர், பூரண கும்ப மரி​யாதை அளித்து வரவேற்​றனர்.

முதலில் விநாயகரை தரிசனம் செய்த ஆளுநர், பின்​னர் மூல​வரை தரிசனம் செய்​தார். தொடர்ந்து, அவர், ஈஸ்​வரன், வள்​ளி மண​வாளன், அம்​பாள், ஆதி​மூல​வர், பைர​வர் ஆகியோரை தரிசனம் செய்​தார். இதுத​விர, தமிழகம் முழு​வதும் முரு​கன் கோயில்​களில் சிறப்பு அபிஷேக​மும், தீபா​ராதனை​யும்​ நடை​பெற்​றது. ஏராள​மான பக்​தர்​கள்​ குவிந்​து, முரு​கப்​ பெரு​மானை வழிபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x