Last Updated : 24 Apr, 2025 11:59 AM

 

Published : 24 Apr 2025 11:59 AM
Last Updated : 24 Apr 2025 11:59 AM

கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா 29-ம் தேதி சாகை வார்த்தலுடன் தொடக்கம்

கோப்புப் படம்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு 18 நாள் சித்திரை தீருவிழா வருகின்ற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

இதனைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 3-ம் தேதி தர்மர் பிறப்பு, 7-ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட மகாபாரத சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி மே 13-ம் தேதி நடைபெற உள்ளது.

அன்று தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி சித்திரை தேரோட்டமும், 15-ம் தேதி விடையாத்தியும், 16-ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள், பூசாரிகள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x