இஸ்கான் கோயிலில் மதுர மகோத்சவ கீர்த்தன் விழா

கடவுளர் உருவங்களுக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கடவுளர் உருவங்களுக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
Updated on
1 min read

சென்னை: சென்னை இஸ்கான் கோயிலில் மதுர மகோத்சவ கீர்த்தன் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் பிரசித்தி பெற்ற இஸ்கான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக மதுர மகோத்சவ கீர்த்தன் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு மதுர மகோத்சவ கீர்த்தன் விழா கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடைந்தது.

3 நாட்களும் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புகழ்பெற்ற கீர்த்தனையர்களின் தலைமையில் கிருஷ்ணரின் திருநாமங்கள் பாடப்பட்டது. மேலும், இந்த கீர்த்தன் திருவிழாவில் மூத்த சந்நியாசிகளும் மற்றும் பல பக்தர்களும் இணைந்து கிருஷ்ணரின் திருநாமங்களையும், ஆன்மீக பாடல்களையும் பாடினர்.

விழா நடைபெற்ற 3 நாட்களில், குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் கீர்த்தனைகள் பாடியும், நடனமாடியும் விழாவை கொண்டாடினர். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயிலில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு நாள் முழுவதும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in