மருதமலை கோயிலுக்கு கார்களில் செல்ல தடை - நெரிசலை தவிர்க்க நடவடிக்கை  

மருதமலை கோயிலுக்கு கார்களில் செல்ல தடை - நெரிசலை தவிர்க்க நடவடிக்கை  

Published on

கோவை: பொங்கல் பண்டிகையின்போது ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் நோக்கில் கோவை மருதமலை கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட நாட்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.

இரண்டு சக்கர வாகனங்கள், மலைப்படிகள், கோயில் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in