2,668 அடி உயர மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலை வந்தடைந்தது மகா தீப கொப்பரை

திருவண்ணாமலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்ட மகா தீப  கொப்பரை.
திருவண்ணாமலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்ட மகா தீப கொப்பரை.
Updated on
1 min read

திருவண்ணாமலை: ​திரு​வண்ணா​மலை​யில் மகா தீப தரிசனம் நேற்று அதிகாலை நிறைவு பெற்​றதும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சி​யில் இருந்து அண்ணா​மலை​யார் கோயிலுக்கு மகா தீப கொப்பரை கொண்டு வரப்​பட்டு, தீபாராதனை காண்​பிக்​கப்​பட்​டது.

அண்ணா​மலை​யார் கோயி​லில் கார்த்திகை தீபத் திரு​விழா கடந்த டிச.1-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற்​றது. கடந்த 4-ம் தேதி விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்​றது. தொடர்ந்து 10 நாள் உற்சவம் ஆரம்ப​மானது.

முக்கிய நிகழ்வாக கடந்த 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சந்நி​தி​யில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சி​யில் மகா தீபமும் ஏற்றப்​பட்டன. மகா தீபத்தை 11 நாட்​களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்​தனர்.
இந்நிலை​யில், நேற்று அதிகாலை​யுடன் மகா தீப தரிசனம் நிறைவு பெற்​றது. இதை யடுத்து, மலை உச்சி​யில் இருந்து அண்ணா​மலை​யார் கோயிலுக்கு கொப்பரை கொண்டு வரப்​பட்டு, தீபாராதனை காண்​பிக்​கப்​பட்​டது.

மகா தீபக் கொப்​பரை​யில் உள்ள கரு மை சேகரிக்​கப்​பட்டு, வாசனை திரவி​யத்தை சேர்த்து, மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனத்​தில் நடராஜருக்கு சாத்​தப்​படும். பிறகு, பக்​தர்​களுக்கு தீப மை பிரசாதம் வழங்​கப்​படும்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in