அண்ணாமலையார் கோயிலில் நவ.14-ல் அன்னாபிஷேகம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 14-ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கு வரும் 14-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நடைபெறும்போது, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. அன்னாபிஷேகம் நிறைவு பெற்றதும், மாலை 6 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in