திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதத்தில் கலப்பட நெய் உபயோகப்படுத்தப் பட்டதாக எழுந்த பிரச்சனை பக்தர்களை மிகுந்த வேதனைக் கள்ளாக்கியது. கலப்பட நெய் உபயோகிப்பதை முற்றிலுமாக நிறுத்திய தேவஸ்தானமும், கர்நாடக மாநிலத்தில் இருந்து ‘நந்தினி’ நெய்யை வாங்கி உபயோகப்படுத்துகிறது.

திருப்பதியில் லட்டு பிரசாதவிற்பனை சற்றும் குறையவில்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஏழுமலையானை66,986 பக்தர்கள் தரிசித்துள்ளனர். இவர்களில் 26,163 பேர் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்திஉள்ளனர். உண்டியல் மூலம் ரூ.5.05 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in