கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் 3 நாள் சிறப்பு வழிபாடு, பூஜைகள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் 3 நாள் சிறப்பு வழிபாடு, பூஜைகள்
Updated on
1 min read

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் 3 நாட்களுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறவுள்ளன.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர்கோயிலில் சிறப்பு வழிபாடு, பூஜை மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 25-ம் தேதி காலை 10மணி சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டநிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

26-ம் தேதி அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12.30 மணி வரைமங்கல ஆரத்தி, தர்ஷன் ஆரத்தி மற்றும் குரு பூஜை, சிறப்பு ஸ்ரீமத்பகவதம் வகுப்பு, கீர்த்தன மேளா,சந்த்யா ஆரத்தி, மஹா அபிஷேகம், மஹா ஆரத்தி, அனுகல்ப பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

27-ம் தேதி நந்தோத்சவ மற்றும் ஸ்ரீல பிரபுபாதா வ்யாச பூஜை காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை கீர்த்தன் மற்றும் ஸ்ரீல பிரபுபாதா புகழாரத்தி, ஸ்ரீல பிரபுபாதா அபிஷேகம், பானு ஸ்வாமி மகாராஜ் வழங்கும் வகுப்பு, ஸ்ரீல பிரபுபாதா ஆரத்தி மற்றும் ராஜ போக் ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in