திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருப்பு
Updated on
1 min read

திருமலை: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முதலே அதிகரித்தது.

சில மாநிலங்களில் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய தேர்வுகளின் முடிவுகள் வெளியானதாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சுவாமியை தரிசிக்க நேற்று 30 மணி நேரம் வரை ஆனது. மாட வீதிகள், லட்டு விநியோக மையம், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், தங்கும் அறைகள் பெறும் மத்திய ரிசப்ஷன் அலுவலகம், பஸ் நிலையம், அன்னதான மையம் என திருமலையில் காணும் இடமெல்லாம் பக்தர்களின் கூட்ட நெரிசல் தான் கண்களுக்கு தெரிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in