Published : 04 Apr 2018 06:10 PM
Last Updated : 04 Apr 2018 06:10 PM

வார ராசிபலன் 05.04.2018 முதல் 11.04.2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணவரத்து இருக்கும்.திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் முன்னேற்றம் காணப்படும். அதே வேளையில் சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. 

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.பெண்கள் பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத் துறையினருக்குப் பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6 

பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் வைத்து வணங்க சாதகமான பலன் கிடைக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்கக் கூடுதல் முயற்சி தேவை. தனாதிபதி குருவின் ராசி சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும்.பயணத்தால் லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனத்தால் லாபம் வரும். அரசாங்கக் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சினைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். சுப காரியம் நிகழும். 

நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோபலம் கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிலுவைப் பணம் வந்து சேரும். மேலதிகாரிகள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு, புதிய நபர்களின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு பூர்விகச் சொத்துக்களால் வரவேண்டிய லாபம் தாமதப்படும். மாணவர்களுக்கு, போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் | எண்கள்: 2, 9 

பரிகாரம்: செவ்வாய்கிழமை மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும்.எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். சனியின் சஞ்சாரம் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண்பகை ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசியில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் சிலரின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். 

உறவினர், நண்பர்களுடன் இருந்த பகை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள், அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு, கல்வியில் காணப்பட்ட மெத்தனப் போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6 

பரிகாரம்: நவக்கிரக குருவுக்கு வியாழக்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். தொழில், வியாபார அலைச்சல்கள் அதிகரிக்கும். 

உத்தியோகத்தில் ஒரு சின்ன விஷயத்துக்கும் அலைய வேண்டி இருக்கும். பணிச் சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். கலைத் துறையினருக்கு, யோககாரகன் சுக்கிரன் கேந்திரம் பெறுவதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகள், மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு, நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6 

பரிகாரம்: சனிக்கிழமையன்று சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்த்துச் செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்திக் கூர்மையுடன் செயல்படுவீர்கள்.தைரியம் உண்டாகும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்விகச் சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். பெண்களுக்கு,மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகள், தங்கள் வளர்ச்சிக்காகச் சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். மாணவர்களுக்கு,பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திக் கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6 

பரிகாரம்: வியாழக்கிழமையன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை அகலும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். இழுபறியாக இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகளில் சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுபகாரியம் நடக்கும்.திருமண முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உங்களது பணிகளுக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திர எண்ணம் ஏற்படும்.

தொழில்,வியாபாரம் லாபகரமாக நடக்கும். அரசாங்கத்தால் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில், செயல் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு, இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கலைத் துறையினருக்கு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.அரசியல்வாதிகள், மேலிடத்துக்குப் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு,கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3 

பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.பணவரத்து கூடும். கடன் பிரச்சினை தீரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x