Published : 29 Apr 2024 04:36 AM
Last Updated : 29 Apr 2024 04:36 AM

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவடைந்தது

படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா உற்சவ சாந்தியுடன் நேற்று நிறைவடைந்தது.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடந்த 21-ல் மதுரைக்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். 23-ம் தேதி வைகை ஆற்றில்பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, தேனூர் மண்டபத் தில் கருட வாகனத்தில் எழுந் தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அன்றுஇரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த 26-ம் தேதி அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு மூன்றுமாவடியிலிருந்து விடைபெற்று, மலைக்குப் புறப்பட்டார். நேற்று முன்தினம் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் கோயிலை அடைந்தார்.

சிறப்பு யாகங்கள்... விழாவின் 10-ம் நாளான நேற்று உற்சவ சாந்தி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் திருமஞ்சனமாகி, கள்ளழகர் மூலஸ்தானம் அடைந்தார். உற்சவ சாந்தியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x