Last Updated : 20 Feb, 2018 09:33 AM

 

Published : 20 Feb 2018 09:33 AM
Last Updated : 20 Feb 2018 09:33 AM

யோகி ராம்சுரத்குமார் என்று கூப்பிடுங்கள்! உங்கள் குரலுக்கு ஓடிவந்து அருள்வார்! - இன்று யோகி முக்தி அடைந்த நாள்

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நினைவு நாள். முக்தி அடைந்த நன்னாள் (20.2.18). இந்த நாளில், யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் என்று மனதார அந்த மகானை, கடவுளின் குழந்தையைக் கூப்பிடுங்கள். உங்களுக்கு எல்லா நலனையும் வளத்தையும் தந்தருள்வார் பகவான் யோகி ராம்சுரத்குமார்!

அவரின் அருளுரைகள்...

* கடவுளின் லீலை, சரியாகவே நடந்துகொண்டிருக்கிறது. ஏனெனில், கடவுள் நிறைநிலையில் உள்ளவர். அவர் எதைச் செய்தாலும் அது சரியாகவே இருக்கும்.

* ஒருவன், தான் ,மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், கடவுளை சந்தோஷப்படுத்த வேண்டும். கடவுளை சந்தோஷப்படுத்துவது என்பது அவரின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதே!

* அப்பாவின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்போம். வேதனை, கஷ்டம் எல்லாம் சரியாகப் போகும். யோகி ராம்சுரத்குமார், இந்தப் பிச்சைக்காரனுடைய பெயர் இல்லை. அப்பாவின் பெயர். அதைச் சொல்லிக் கூப்பிட்டால், உடனே உதவிக்கு வருவார் அப்பா.

*கடவுள் உன்னை எந்தச் சூழ்நிலையில் வைத்தாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வதுடன் அதற்காக நீ நன்றியுடன் இருக்கவேண்டும். நடப்பவை எல்லாம் அவரின் ஆசீர்வாதமே!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நினைவு நாளில் பகவானை நினைப்போம். பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் போற்றுவோம்.யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா எனும் திருநாமத்தைச் சொல்லுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x