Published : 24 Feb 2024 06:10 AM
Last Updated : 24 Feb 2024 06:10 AM

மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற மயான பூஜையில் பட்டுச்சேலையில் பிடிமண் எடுத்த அருளாளி அருண்.

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட அருளாளிகள், ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலத்தை ஏந்திச் சென்றனர்.

மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் உருவாக்கப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருவுருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அம்மனின் மண் உருவத்தை மயான அருளாளி அருண் சிதைத்து, எலும்பைக் கவ்வியபடி பட்டுச்சேலையில் பிடி மண்ணை எடுத்தார்.

பின்னர் மயான பூஜை 4 மணிக்கு நிறைவடைந்தது. வால்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் நிதி தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மயான பூஜையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து மாசாணியம்மன் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x