Last Updated : 27 Jan, 2018 08:56 AM

 

Published : 27 Jan 2018 08:56 AM
Last Updated : 27 Jan 2018 08:56 AM

ஜெயிக்கச் செய்வார் ஜெய் அனுமன்!

நாம் செய்யும் எல்லாக் காரியங்களும் வெற்றி அடைய வேண்டும்தானே. அப்படியான வெற்றியை நோக்கித்தான் ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறோம். அந்தக் காரியங்களில் துணை நின்று, காரியத்தில் வீரியம் சேர்த்து, அதனால் வெற்றியையும் தந்தருளும் ஜெய் அனுமனை இந்த நாளில், மறக்காமல் வேண்டுங்கள். மனதார வேண்டுங்கள். நம்மை ஜெயிக்கச் செய்வார் ஜெய் அனுமன்.

புதன் கிழமையும் சனிக்கிழமையும் அனுமன் வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாட்கள். இந்த நாட்களில், அனுமனை ஆராதிப்பதும், அனுமன் சாலீசா பாராயணம் செய்து வழிபடுவதும் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளும் என்கிறார் நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.

இந்த சனிக்கிழமை நன்னாளில், அனுமனை வணங்கி வழிபடுங்கள். அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று, அஞ்சனை மைந்தனை காரியத்தில் துணை இரு என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் வேலையோ வியாபாரமோ... அவர் துணை நின்று காப்பார். உங்கள் காரியத்தில் வீரியம் சேர்ப்பார். செயலில் ஈடுபடுவதற்கான தெளிவையும் திடத்தையும் மனதில் உண்டுபண்ணுவார்.

சனிக்கிழமைகளில் அனுமனைத் தரிசித்து, அவருக்கு துளசி மாலை சார்த்துங்கள். முடிந்தால், அவருக்கு வடைமாலை அல்லது வெற்றிலை மாலை சார்த்துங்கள். ஒரு சனிக்கிழமை துளசிமாலை, இன்னொரு சனிக்கிழமை வடைமாலை, மற்றொரு சனிக்கிழமையில் வெற்றிலை மாலை என அனுமனுக்கு அணிவித்து பிரார்த்தனை செய்கிற பக்தர்கள் ஏராளம்.

இந்த நாளில், அனுமனை வணங்குங்கள். உங்கள் வாழ்வில் உங்களை ஜெயிக்கச் செய்வார் ஜெய் அனுமன் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x