Published : 26 Jan 2024 05:01 AM
Last Updated : 26 Jan 2024 05:01 AM

திருவையாறில் இன்று தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா தொடக்கம்: ஜன.30-ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா இன்று (ஜன.26) மாலை தொடங்குகிறது.

இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு, தியாகப் பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைக்கிறார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இரவு 7 மணிக்கு காயத்ரி வெங்கட்ராமன் பாட்டு, 7.20 மணிக்கு கணேஷ், குமரேஷ் வயலின், 8 மணிக்கு ஜெயந்தி குமரேஷ் வீணை, 8.20 மணிக்கு குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா பாட்டு, 8.40 மணிக்கு ஷோபனா விக்னேஷ் பாட்டு, 10 மணிக்கு திருமானூர் கணேசன், கருணாநிதி குழுவினரின் நாகசுரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, வரும் 30-ம் தேதி வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30 -ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்னாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு, பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசைஅஞ்சலி செலுத்த உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x