பழநியில் இன்று தைப்பூசத் திருவிழா

பழநியில் இன்று தைப்பூசத் திருவிழா
Updated on
1 min read

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிமலைக் கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இன்று (ஜன. 25) தைப்பூசத்தையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக வந்துள்ளனர்.

பழநி மலைக்கோயிலில் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இடும்பன் குளம், சண்முக நதியில் புனித நீராடிய பக்தர்களை, படகில் ரோந்து சென்று தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர்.சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in