காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நாளை மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நாளை மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சி மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை நிகழ்ச்சி ஜன. 8-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

இவரது 30-வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் ஜன. 8-ம் தேதி ( நாளை ) நடைபெறுகிறது. இதையொட்டி மஹா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நான்கு ராஜ வீதிகளிலும் புறப்பாடு நடைபெறுகிறது. தேனம்பாக்கத்தில் உள்ள மடத்திலும் மஹாருத்ர ஜபம், ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in