Published : 20 Dec 2017 03:40 PM
Last Updated : 20 Dec 2017 03:40 PM

வார ராசிபலன் 21/12/2017 முதல் 27/12/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்க்கிறார்.தனாதிபதி சுக்கிரன் மாற்றம்பெறுகிறார். நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். தொழில் ஸ்தானம் நடுநிலைமையாக இருக்கிறது.தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள்  பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப்போடுவது சிறந்தது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு மனத் தடுமாற்றம் நீங்கும். கலைத் துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து எதிலும் தீர ஆலோசித்து ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனுக்குப் பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர, பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய், வில்லங்கம் ஏற்படலாம். மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள், எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிவரலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பீர்கள். போட்டிகள் விலகும்.எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பாதிபதி புதன் ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்கள், எதை பற்றியாவது நினைத்துக் கவலைபடுவீர்கள். கலைத் துறையினர், மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். அரசியல்வாதிகள் சிறிய வேலையைக்கூட செய்து முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள்,  கல்வியில் வெற்றிபெறத் திட்டமிட்டுப் படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6

பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க, எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்; மனக்கவலை நீங்கும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ராசிக்கு மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கின்றன. ராசியைப் பார்க்கும் சூரியனால் திடீர் கோபம் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் தனஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். லாபம் குறைவதுபோல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும்.மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேசுவது நல்லது. சிறுவர்கள் எதிர்கால நலன் பற்றிச் சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். அரசியல்வாதிகளே, உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்குப் பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: பானகம் அர்ப்பணித்துப் பெருமாளை வணங்க. முன் ஜென்மப் பாவங்கள் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் அதிகமான பணிச்சுமை மூலம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் இருந்த கவலைகள் அகலும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் முன்னேற்றம் ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கம் உண்டாகலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு அதிகரித்ததுபோல் உணர்வார்கள்.மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம்.ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்குக் காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். அரசியல்வாதிகள் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத் துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூட முடியும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த  மெத்தனப் போக்கு மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை,நீலம் | எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரிக்கு வேப்பிலை சாற்றி வணங்க, பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாகச் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாகக் கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். பெண்களுக்குத் தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும்.மாணவர்களுக்குக்  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு அகலும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு,மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும்.  பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றப் பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பணவரத்து இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில்  மதிப்பும்,மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள், திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டுப் படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி கொடுக்கும் சம்பவங்கள் நிகழும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை,மஞ்சள் | எண்கள்: 1, 3, 5

பரிகாரம்: அய்யப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர, சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x