திருமுருகநாத சாமி கோயிலில் லட்சத்து எட்டு தீப வழிபாடு

திருமுருகநாத சாமி கோயிலில் லட்சத்து எட்டு தீப வழிபாடு
Updated on
1 min read

திருப்பூர்: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாத சாமி கோயிலில் லட்சத்து எட்டு தீபத்திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழு, சேக்கிழார் புனித பேரவை, திருமுருகநாதசாமி அறக்கட்டளை ஆகியவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு, 1000 லிட்டர் நல்லெண்ணெய், லட்சத்து எட்டு விளக்கு மற்றும் திரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோயிலில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் கோயில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.

ஒரே இடத்தில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு, எங்கும் ஒளிமயமாக காட்சி அளித்தது. முன்னதாக, திருமுருகநாதசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோயில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் விமலா, நகராட்சி தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in