Published : 29 Oct 2023 04:00 AM
Last Updated : 29 Oct 2023 04:00 AM

‘இந்து தமிழ் திசை’, பச்சையப்பாஸ் சில்க்ஸ் இணைந்து நடத்திய கொலு கொண்டாட்ட போட்டி பரிசளிப்பு விழா

சென்னை: பச்சையப் பாஸ் சில்க்ஸ் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கொலு கொண்டாட்டப் போட்டியை நடத்தியது.

இக்கொலு கொண்டாட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் வைத்த கொலுவைப் படமெடுத்து அனுப்பியிருந்தனர். போட்டிக்கு வந்த கொலு புகைப் படங்களிலிருந்து 9 வாசகர்களின் கொலுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று பச்சையப் பாஸ் சில்க்ஸ் சென்னை கிளையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

பச்சையப்பா சில்க்ஸ்-இன் சென்னை பொது மேலாளர் சின்னசாமி வாசகர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கிளை மேலாளர் சண்முகம் ஏற்பாடுகளை செய்திருந்தார். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ‘இந்து தமிழ் திசை' துணை மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x