Published : 20 Dec 2017 09:03 AM
Last Updated : 20 Dec 2017 09:03 AM
திருவெம்பாவை 5
மாலறியாநான்முகனுங்காணாமலையினைநாம்
போலறிவோம்என்றுள்ளபொக்கங்களேபேசும்
பாலூறுதேன்வாய்ப்படிறீகடைதிறவாய்
ஞாலமேவிண்ணேபிறவேஅறிவரியான்
கோலமும்நம்மைஆட்கொண்டருளிக்கோதாட்டுஞ்
சீலமும்பாடிச்சிவனேசிவனேயென்(று)
ஓலம்இடினும்உணராய்உணராய்காண்
ஏலக்குழலிபரிசேலோர்எம்பாவாய்.
"திருமாலும் நான்முகனும் காணமுடியாத மலையை நாம் அறிவோம்" என்று தோழியர் சொல்கிறார்கள். அந்த விஸ்வரூபனை உணர்ந்தவர்களைப் போன்று சொல்கிறார்கள்.
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற இனிய சொற்களைப் பேசுகிற வஞ்சகியே, கதவைத் திற!என்கிறார்கள்.
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிதான, அரிதினும் அரிதான பெருமானுடைய திருக்கோலமும்,அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும்பாடி "சிவனே! சிவனே!" என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும்உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே! என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை?என்பதாக மாணிக்கவாசகர் பெருமான், தன் பக்தியை பாடலாகப் பாடி உருகுகிறார்; நம்மையெல்லாம் உருகவைக்கிறார்.
இந்தத் திருவெம்பாவைப் பாடலை, தினமும் பாடுங்கள். அற்புதமான மார்கழி நாளில், காலையில் வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றி வழிபடுங்கள். அந்த மகேசன், எந்நாளும் காத்தருள்வான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT