Published : 11 Dec 2017 12:29 PM
Last Updated : 11 Dec 2017 12:29 PM

வார ராசிபலன் 07/12/2017 முதல் 13/12/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறைச் சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசி பழகுவது நல்லது. பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழில் ஸ்தானத்தை கேது அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலான உழைப்பு தேவை.  பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு சுமுக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்குக் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.  மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: குலதெய்வத்தைப் பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை தோன்றும். சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். உறவு பலப்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் செல்லலாம். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பதென்ற குழப்பம் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். பெண்களுக்குப் புத்திசாதூரியம் அதிகரிக்கும் பிரச்சினைகள் குறையும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 5, 6

பரிகாரம்:  மகாலட்சுமியைப் பூஜிக்க பணபிரச்சினை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். பேச்சில் இனிமை, சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியைச் சந்திப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் கடுமையைத் தவிர்க்க வேண்டும்.

லாபம் குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். கலைத்துறையினர் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் வீண்பேச்சைக் குறைப்பது நல்லது. மாணவர்களுக்குக்  கல்வியை பற்றிய கவலை ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சினை தீரும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். ராசியாதிபதி சந்திரன் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலப் பாதிப்பு உண்டாகலாம். பணவரவு இருக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் துளிர்க்கும். நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராதென்று நினைத்தது வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பெண்களுக்குக் காரியங்களைச் செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். கலைத்துறையினர் வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6

பரிகாரம்: காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் தடைப்பட்ட காரியங்களால் ஏற்பட்ட தாமதம் நீங்கும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரம் மூலம் பயணங்கள் ஏற்படலாம். குருவின் சஞ்சாரத்தால் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உணவில் கட்டுப்பாடு அவசியம். குடும்ப நிம்மதி குறையக்கூடும். வீடு, வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

லாபம் குறையக்கூடும். உத்தியோகத்திலிருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  மாணவர்களுக்குக் கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்:  சிவனுக்கு எலுமிச்சம்பழ அபிஷேகம் செய்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். ராசிக்கு தன,வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் குருவால் நற்பலன்களை பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அதே வேளையில் அடுத்தவர் செயல்களுக்குப் பொறுப்பேற்காமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும்.

தொலைதூரத் தகவல்கள் நல்லவையாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாகப் பழகிக் காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில்  மனம்விட்டுப் பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு 

நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம் | எண்கள்: 2, 5

பரிகாரம்: அய்யப்பனைத் தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x