Published : 09 Nov 2017 10:17 AM
Last Updated : 09 Nov 2017 10:17 AM

வார ராசிபலன் 09/11/2017 முதல் 15/11/2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்க எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நடைபெறும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உபதொழில் ஆரம்பிப்பதற்கான சூழல் கனியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரித்துச் செல்வார். கவலைகள் நீங்கும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை,மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமை அன்று பூஜித்து வர பொருள் வரத்து கூடும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சனி இருந்தாலும் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் இருக்கிறார். பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தால் லாபம் கிடைக்கும். புதிய அறிமுகம் கிடைக்கும். எதிரிகள் உபாதைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இனிமையான பேச்சு, புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவார்கள். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பேச்சினால் மேலதிகாரிகளைக் கவர்வார்கள். குடும்பத்திலிருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் சம்பவங்கள் நடக்கும்.

உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை அளிப்பீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 5, 9

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமை அன்று எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். எதிலும் கூடுதல் சிரத்தையுடன் இருப்பது நல்லது. பணவரவு அதிகமாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உங்கள் பொருட்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் சீராக இருக்கும். தொழில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் பதற்றத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் நல்லபடியாக முடியும். மேலதிகாரிகள் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும்.

உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். பெண்களின் செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு அன்பும் அனுகூலமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள், கல்வி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த சுணக்க நிலை மாறும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். கடந்த காலத்தில் தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். வீடு, மனை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரப் பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். மேலிடம் ஆதரவாக இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு, விவகாரங்களில் காலதாமதம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. பெண்கள் சேமிப்பு தொடர்பில் கவனம் தேவை.கலைத்துறையினருக்கு நல்ல சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்குப் பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, மேற்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 6, 9

பரிகாரம்: திங்கள்கிழமை விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும். காரியத் தடை நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் நினைத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனத்தில் தேக்கி வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் சிக்கலான காரியங்களையும் சுலபமாக செய்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடைபெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற முடியும்.வழக்குகளில் சாதகமான நிலையைப் பெறலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தமான நிலை மாறும். வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் வரும்.

பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானத்தைக் கடைபிடிக்கவும். மேலிடம் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு வரும். சுபகாரியத் தடை அகலும். பெண்களுக்கு தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத் துறையினர் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். கூடுதல் வருமானமும் வரும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை,நீலம் | எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: வியாழக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தொடர்ந்து எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். புதிய சொத்து சேரும். வழக்குகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது. முடங்கிக் கிடந்த திட்டங்களில் வேகம் பிடிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

மேலிடத்தின் உத்தரவால் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவான நிலையை எடுப்பார்கள்.  குடும்ப வேலைகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கி அதனைச் செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்குப் பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களைக் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு,மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x