Last Updated : 09 Nov, 2017 03:09 PM

 

Published : 09 Nov 2017 03:09 PM
Last Updated : 09 Nov 2017 03:09 PM

திருவருளைத் தரும் குரு பகவானுக்கு உகந்தவை!

குருவருளின்றி திருவருள் இல்லை என்பார்கள். எனவே எந்தத் தெய்வத்தை வணங்குவதற்கு முன்பும், குரு பகவானை வணங்கித் தொழுவது கூடுதல் பலன்களைத் தரும்.

குரு பகவானைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.

குருவுக்கு உகந்த தானியம் - கொண்டக்கடலை.

சுவை - இனிப்பு

திசை - வடகிழக்கு

வாகனம் - யானை

உலோகம் - தங்கம்.

மலர் - முல்லை

சமித்து - அரசு

இடம் - ஹோமம், யாகம் செய்யும் இடத்தில் நாம் அழைக்காமலே வருவார்.

கிழமை - வியாழன்

எண் - மூன்று

தந்தை - ஆங்கிரஸ முனிவர்

கோத்திரம் - ஆங்கிரஸ கோத்திரம்

காலம் - ஒரு ராசியில் ஒரு வருடம்

முழுமை - ராசிக்கட்டம் முழுவதுமாக 12 வருடங்கள்.

அதிதேவதை - இந்திரன்

பிரதி அதிதேவதை - ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

நட்பு கிரகங்கள் - சூரியன், செவ்வாய், சந்திரன்.

பகை கிரகங்கள் - புதன், சுக்கிரன்

சம கிரகங்கள் - சனி, ராகு, கேது.

குரு தசாகாலம் - 16 வருடங்கள்

நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

குரு பகவானுக்கு உரியவற்றையும் விசேஷமானவற்றையும் அறிந்து, குரு வாரத்தில் குருவைத் தொழுவோம். குறைவின்றி வாழ்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x