வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

வேலூர்: வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண் டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜலகண் டேஸ்வரர் கோயிலில் குட முழுக்கு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங் குவது வேலூர் கோட்டை ஆகும். இந்த கோட்டை வளாகத்துக்குள் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயி லில் ஏற்கெனவே மூன்று முறை குடமுழுக்கு விழா நடத்தப் பட்டுள்ள நிலையில், 4-வது முறையாக குடமுழுக்கு விழா நடத்துவற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன.

இதைமுன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் முன்புள்ள பெரிய கொடி மரத்துக்கு ரூ.2 கோடி மதிப்பிலும், அம்பாள் சந்நிதி முன்புள்ள சிறிய கொடி மரத்துக்கு ரூ.43 லட்சம் மதிப்பில் கோபுர கலசங்கள் உட்பட அனைத்துக்கும் தங்க முலாம் பூசுதல் மற்றும் தங்க வேலைப்பாடுகள் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பில் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, கடந்த புதன் கிழமை காலை முதல் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதற்காக கோயில் வளாகத்தில்15 பரிவார யாக சாலைகள் உட்பட மொத்தம் 54 யாக குண்டங்கள் அமைக் கப்பட்டிருந்தன. தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 10.30 மணிய ளவில் ராஜகோபுரம், விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்கள் மீதும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோட்டை கோயிலுக்கு ரூ.5 கோடி மதிப்பில் அளிக்கப்பட்டிருந்த புதிய தங்கத்தேருக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. ராஜகோபுர கலசங்களுக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீ சக்திஅம்மா தலைமையிலும், விமான கோபுர கலசங்களுக்கு ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் தருமஸ்தாபனத் தலைவர் கலவை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள், மகா தேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள் ஆகியோர் தலைமை யிலும் சிவச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தினர்.

காஞ்சிபுரம் கே.ராஜப்பா சிவாச் சாரியார், மாயவரம் சிவபுரம் வேத பாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் 175 சிவாச்சாரி யார்கள் குடமுழுக்கு விழாவை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.

விழாவையொட்டி ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்ப வங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, ‘ட்ரோன்' கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு, அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்றன. குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in