Published : 19 Sep 2017 02:15 PM
Last Updated : 19 Sep 2017 02:15 PM
புராண விளக்கம்:
சூரபத்மனை சம்ஹாரம் செய்ய உதித்தவர் "முருக பெருமான் ". சூரனை வதைக்க போகும் முன் தந்தையிடம் ஆசி பெற்ற முருக பெருமான், பார்வதி தேவியான தன் தாயிடம் ஆசி பெறும்போது, பார்வதி அன்னை முருகருக்கு சில விசேஷ அம்பு அஸ்திரங்களை வழங்கியதோடு, அத்துடன் சிவசக்தி சொரூபமான பலம் பெருந்திய பல பிரம்மாஸ்திரத்திற்கு ஒப்பான "சக்தி வேல்" கொடுத்தருளினார் என்கிறது புராணம். சக்தி வேலுடன் இன்னபிற விசேஷ அஸ்திரங்களை பெற்ற இச்சம்பவம் தைப்பூசத்திருநாளில் நடைபெற்றதாக கூறுகிறது கந்தபுராணம். எனவே தைப்பூசம் திருநாளில் முருகவழிபாடு அவசியமாகிறது.
ஜோதிட விளக்கம்:
ஜோதிடத்தில் சிவ சொரூபம் சூரியனாவார். ஜோதிடத்தில் தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. கிரகங்களின் அரசன் என்று அழைக்கப்படும் சூரியன் தை மாதம் அன்று கால புருஷ சக்கரத்தில் பத்தாமிடத்தில் மகரத்தில் அமர்ந்து "திக்பலம் " பெறுகிறார். சூரியனுக்கு ஏழாமிடமான ஆதாவது சப்தமத்தில் கடகத்தில் சக்தி தேவி அல்லது பார்வதியின் வடிவான சந்திரன், பூசம் நட்சத்திரத்தில் ஆட்சி பெறவதோடு மட்டுமின்றி கூடுதலாக "திக்பலம்" பெறுகிறார். இதனால் மிக பலம் பொருந்திய சிவ சக்தி சொரூபம் பிரஞ்சத்தில் பூசம் நட்சத்திரத்தில் உருவாகிறது.
பொதுவாக பூமியில் இருந்து பார்க்கையில், பூச நட்சத்திரமானது பல அம்புகள் சேர்த்து வைத்தது போல காட்சியளிக்கும். இதே பூச நட்சத்திர அம்பு நட்சத்திர வடிவம் தைப்பூசத் திருநாளில் திக்பலம் பெற்ற சூரிய மற்றும் சந்திரன் ஒளி வெள்ளத்தில் ஆகர்ஷண சக்தியுடன் பூமியில் நம் கண்களுக்கு காட்சியளிக்கும்.
இந்த பூச நட்சத்திர வானில் தெரியும் தோற்றம் சக்தி தேவி முருகபெருமானுக்கு அளித்த "அஸ்திரங்கள்" மற்றும் "சக்திவேல்" வடிவில் நிலவொளியில் காட்சியளிக்கும் என்பது ஜோதிட அறிவியலாகும். இதுவே தைப்பூசத்தில் முருக வழிபாட்டுக்கு புராண மற்றும் ஜோதிட காரணமாகும்.
தைப்பூசத்தில் வானில் தெரியும் சக்திவேல் தரிசனம் வணங்குவதால், எதிரிகள் பயமின்மை, புதிய வேலை கிடைத்தல், வீடு வாகன யோகம், சுகப்பிரசவம், மன வருத்தமின்மை, உடல்நலம் சீர்படுதல், கந்தனின் கருணை இவை அனைத்தும் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT