Published : 05 Apr 2015 02:21 PM
Last Updated : 05 Apr 2015 02:21 PM

குறிப்புகள் பலவிதம்: பளிச் முகத்துக்கு எலுமிச்சை

* எலுமிச்சை சாறு பிழிந்து ஆவி பிடித்தால் முகம் பொலிவு பெறும்.

* முளைக் கீரை சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப் பொலிவு உண்டாகும்.

* கடலை மாவு, தேன், பால், பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்துக் கழுவினால் முகம் பிரகாசமாகும்.

* வாழைப்பழத்தை மசித்து பால், தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவுறும்.

* எலுமிச்சை சாற்றில் சந்தனக் கட்டையை தேய்த்து முகத்தில் பூச முகம் பளிச்சென்று மாறும்.

* துளசி இலையை முகத்தில் தேய்க்க முகம் அழகும் பொலிவும் பெறும்.

* தயிருடன் சிறிதளவு சமையல் சோடா கலந்து முகத்தில் தடவ முகம் மிளிரும்.

- முத்தூஸ், தொண்டி, ராமநாதபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x