Published : 11 Mar 2015 06:15 PM
Last Updated : 11 Mar 2015 06:15 PM

வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு, பார் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் இயங்குகிறது. விதிமுறைகளை மீறி பார் கவுன்சில், பிரபாகரன் தலைமையிலான தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். இதனால், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக நீதிமன்ற வளாகத்தில் முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.

உயர்நீதிமன்ற இரண்டாவது அமர்வுக்கு வெளியே வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x