Published : 26 Mar 2015 10:12 AM
Last Updated : 26 Mar 2015 10:12 AM
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னரின் வாழ்க்கை நிலையை உயர்த்த ஆதிதிராவிடர் துணை திட்டத்துக்கு ரூ.11 ஆயிரத்து 274 கோடியே 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை 2015-16-ம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டில் 20.46 சதவீதமாகும். அதேபோல் பழங்குடியினர் துணை திட்டத்துக்கு ரூ.657.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரும் நிதி ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட் டத்துக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.55 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் உயர்கல்விக்கான உதவித்தொகையில் மத்திய அரசு தனது பங்கான ரூ.982 கோடியே 31 லட்சத்தை முழுமையாக அளிக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு இத்திட்டத்துக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.669 கோடியே 64 லட்சம் வழங்கியது. இந்த முயற்சி வரும் நிதி ஆண்டிலும் தொடரும். அதன்படி பள்ளிக்கல்வி திட்டத்துக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.56 கோடியே 37 லட்சம் உதவித் தொகை ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் உயர்கல்விக்கு ரூ.674 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாணவர்களின் விடுதி உணவுச் செலவுக்காக ரூ.102 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. புதிய விடுதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் நிதி ஆண்டிலும் நபார்டு வங்கியின் உதவியுடன் இத்திட்டத் துக்கு ரூ.162 கோடியே 91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT